தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

திருத்தணி முருகன் கோயிலில் பொது விருந்து 

திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சுகந்திர தினவிழா பொது விருந்தில் அரக்கோணம் எம்.பி. கோ.அரி உள்பட 2,500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சுகந்திர தினவிழா பொது விருந்தில் அரக்கோணம் எம்.பி. கோ.அரி உள்பட 2,500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 அறுபடை வீடுகளில் 5 -ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டு தோறும் சுதந்திர தினவிழாவில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்று வருகிறது. 
அதேபோல், 72-ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு முருகன் கோயிலில் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சிக்கு கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி தலைமை வகித்தார். கோயில் தக்கார் வே.ஜெயசங்கர் முன்னிலை வகித்தார். இதில்,  எம்.பி. கோ.அரி கலந்து கொண்டு பொது விருந்தை தொடங்கி வைத்தார்.இந்த விருந்தில் 2500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். 
விழாவில் கோயில் நிர்வாகம் சார்பில் 500 பக்தர்களுக்கு இலவசமாக சேலை வழங்கப்பட்டது.  இதில், கோயில் அலுவலர்கள், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.