முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

திருத்தணி முருகன் கோயிலில் பொது விருந்து 

திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சுகந்திர தினவிழா பொது விருந்தில் அரக்கோணம் எம்.பி. கோ.அரி உள்பட 2,500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சுகந்திர தினவிழா பொது விருந்தில் அரக்கோணம் எம்.பி. கோ.அரி உள்பட 2,500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 அறுபடை வீடுகளில் 5 -ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டு தோறும் சுதந்திர தினவிழாவில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்று வருகிறது. 
அதேபோல், 72-ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு முருகன் கோயிலில் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சிக்கு கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி தலைமை வகித்தார். கோயில் தக்கார் வே.ஜெயசங்கர் முன்னிலை வகித்தார். இதில்,  எம்.பி. கோ.அரி கலந்து கொண்டு பொது விருந்தை தொடங்கி வைத்தார்.இந்த விருந்தில் 2500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். 
விழாவில் கோயில் நிர்வாகம் சார்பில் 500 பக்தர்களுக்கு இலவசமாக சேலை வழங்கப்பட்டது.  இதில், கோயில் அலுவலர்கள், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.