மாதவரம் பகுதியில் மதிமுக கொடியேற்று விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பகுதிச் செயலாளர் ஏ.வி.ராஜன் தலைமை வகித்தார். மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
இதில், மாவட்டச் செயலாளர் டி.சி.ராஜேந்திரன், பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிர்வாகி கோபி நன்றி
கூறினார். இதேபோல மாதவரம் பகுதிக்கு உள்பட்ட மாதவரம், கனகசத்திரம், புழல் கேம்ப் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மதிமுக கொடியேற்றும் விழா
நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.