இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கும்மிடிப்பூண்டியில் மரக்கன்றுகள் நடும் விழா

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பில், தீவிர பிளாஸ்டிக் ஒழிப்புப் பணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 7:47 am IST

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பில், தீவிர பிளாஸ்டிக் ஒழிப்புப் பணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்யும் நோக்கிலும், பயன்படுத்தப்படாத தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தால் அவற்றைக் கண்டறிந்து பறிமுதல் செய்யும் நோக்கிலும் தீவிர பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்வு நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பேரூராட்சி இளநிலை உதவியாளர் நரேந்திரன், பதிவறை எழுத்தர் கருணாநதி, சுகாதார மேற்பார்வையாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமூக ஆர்வலர்கள் கும்மிடிப்பூண்டி காந்தி உலக மைய நிர்வாகி எம்.எல்.ராஜேஷ், பெப்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த சுரேஷ்பாபு ஆகியோர், பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு பிளாஸ்டிக் ஒழிப்புப் பிரிவினர் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி முழுக்க வீடுகளில் சோதனை செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். 
மேலும் பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் தலைமையில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து, பயன்படுத்தப்படாத நிலையில் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும், பேரூராட்சி சார்பில் கும்மிடிப்பூண்டியில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.