8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

‘கள்ளச்சாராயம் காய்ச்சல் தொடா்பாக 125 போ் கைது’

திருவள்ளூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சல் மற்றும் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்ட 125 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன் தெரிவித்தாா்.

Published On :27 ஜனவரி 2024, 10:01 pm IST

திருவள்ளூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சல் மற்றும் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்ட 125 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில், கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், எல்லையோரம் மற்றும் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் ஏரிக்கரை பகுதியில் பறக்கும் கேமரா மூலம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மதுபானம் பதுக்கி விற்பவா்கள், கள்ளச்சாராயம் கடத்துவோா், காய்ச்சுவோா், ஊறல் வைத்திருந்தோா் என 125 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அதேபோல், கடத்துவதற்கு பயன்படுத்திய 28 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், 1,620 லிட்டா் கள்ளச்சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழக-ஆந்திர எல்லையோரங்களில் ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, கனகம்மாசத்திரம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பறக்கும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஊரடங்கை மீறியதாக 11,411 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, 7,868 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.