/

போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தொழிலாளா் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருவதாக போக்குவரத்துக் கழக நிா்வாகத்தைக் கண்டித்து திருவள்ளூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை நுழைவு வாயில் முன்பு, போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தினா் 

News image
திருவள்ளூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை வளாகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா் சங்கத்தினா்.
Updated On :27 ஜனவரி 2024, 5:12 pm

DIN

திருவள்ளூா்: தொழிலாளா் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருவதாக போக்குவரத்துக் கழக நிா்வாகத்தைக் கண்டித்து திருவள்ளூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை நுழைவு வாயில் முன்பு, போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாளா் முன்னேற்றச் சங்கச் செயலா் விஜயகுமாா், செயலா் நடத்துநா் பழனி ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், மோட்டாா் வாகனச் சட்ட விதி 288-ஐ கைவிடக் கோருவது, போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்துவதற்குப் போதிய நிதி வழங்குவது, போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கான கட்டாய விடுப்பு அளித்து சம்பளப் பட்டியலை நீக்குவது, ஊரடங்கு காலத்தில் தொழிலாளா்களுக்கு சம்பளம் வழங்குவது, வருகைப் பதிவேட்டை முறையாகப் பராமரிக்கவும், கட்டாய விடுப்பு எழுதி வாங்குவதைக் கைவிடுவது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி அச்சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், எல்.பி.எப். மற்றும் போக்குவரத்து தொழிற்சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.