புழல் ஏரியில் மூழ்கி மூன்று விளையாட்டு வீரர்கள் பலி: இருவரது சடலம் மீட்பு
அம்பத்தூர் அருகே புழல் ஏரி பகுதியோரத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது மூழ்கிய விளையாட்டு வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.


திருவள்ளூர்: அம்பத்தூர் அருகே புழல் ஏரி பகுதியோரத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது மூழ்கிய விளையாட்டு வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
இருவரது சடலங்களைப் போராடி மீட்ட தீயணைப்பு துறையினர், ஒருவரது சடலத்தைத் தேடி வருகின்றனர்.
அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பம் மணிகண்டன்(19), தமிழ்செல்வன்(17), வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த திலீப்(20) உள்ளிட்ட 8 பேர் தேசிய அளவில் ஓட்டப் போட்டியில் பங்கேற்கக் கூடிய விளையாட்டு வீரர்கள். இந்த நிலையில் திங்கள்கிழமை வழக்கம்போல் பயிற்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றார்களாம்.
அதைத் தொடர்ந்து, அம்பத்தூர் அடுத்த மதுரா மேட்டூர் அருகில் புழல் ஏரி பகுதியில் பிற்பகலில் 3 பேரும் குளிக்கச் சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென ஆழமான பகுதியில் அவர்கள் மூழ்கினர். அப்பகுதியில் இருந்தவர்கள் இதைப் பார்த்து மாதவரம் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் புழல் ஏரியோரத்தில் படகில் சென்று 4 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீலிப் மற்றும் மணிகண்டன் ஆகியோரின் சடலங்களை மீட்டனர். மேலும், அம்பத்தூர் கள்ளிக்குப்பம் தமிழ்செல்வனின் சடலத்தை தீயணைப்பு துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...