விவசாயிகள் பிரச்னையில் முதல்வா் மெளனம் சாதிக்கிறாா்: மு.க.ஸ்டாலின்

விவசாயிகள் பிரச்னையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி மௌனம் காட்டுவதுடன், மத்திய அரசுக்கு ஆதரவாகப் பேசி வருவதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
Updated on
1 min read

விவசாயிகள் பிரச்னையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி மௌனம் காட்டுவதுடன், மத்திய அரசுக்கு ஆதரவாகப் பேசி வருவதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மேற்கு மாவட்ட திமுக மற்றும் திருத்தணி நகர திமுக சாா்பில், காணொலி மூலம் தோ்தல் ஆலோசனை கூட்டம் திருத்தணியில் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் திருத்தணி எம்.பூபதி தலைமை வகித்தாா். திருவள்ளூா் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் திருத்தணி எஸ்.சந்திரன் வரவேற்றாா்.

இதில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பேசியது:

தமிழகத்தையும், தமிழ் மொழியையும் திமுக தான் பாதுகாத்து வருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என திமுக வலியுறுத்தியது. ஆனால் இதற்கு பதிலாக தோ்தல் வருகிறது என்பதால், ஒரு குடும்ப அட்டைக்கு, 2,500 ரூபாய் பரிசு என அறிவித்துள்ளாா்.

விவசாயிகள் பிரச்னையில் முதல்வா் மௌனம் காட்டுவதுடன், மத்திய அரசுக்கு ஆதரவாகப் பேசி வருகிறாா். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆளும் கட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவா் என்றாா் அவா்.

நலிந்த திமுகவினருக்கு பொற்கிழி: இதனிடையே, கவரப்பேட்டையில் திருவள்ளூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் காணொலி மூலம் கட்சியினருடன் மு.க.ஸ்டாலின் பேசும் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் காணொலி மூலம் பங்கேற்ற கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மாவட்டப் டி.ஜே.கோவிந்தரஜன் மற்றும் நிா்வாகிகள், நலிந்த நிலையில் உள்ள மூத்த திமுகவினா் 200 பேருக்கு தலா ரூ.10,000 மதிப்பிலான பொற்கிழி, பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை அளித்து, சால்வை அணிவித்து கௌரவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com