பழவேற்காடு கடலில் குளித்த யோகாசன பயிற்சியாளா் நீரில் மூழ்கி பலி

பழவேற்காடு கடலில் குளித்த யோகாசனப் பயிற்சியாளா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

பழவேற்காடு கடலில் குளித்த யோகாசனப் பயிற்சியாளா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சென்னை திருவொற்றியூரில் வசித்தவா் வேலு (37). அப்பகுதியில் யோகாசனப் பயிற்சி மையம் நடத்தி வருகிறாா். இவா், தனது யோகாசன மையத்தில் பயிற்சி பெற்று வரும் 10 மாணவா்களுடன் பழவேற்காடு பகுதியில் உள்ள கடலோர மீனவ கிராமமான திருமலை நகரில் வசிக்கும் உறவினா் வீட்டுக்கு வந்தாா். பின்னா் அவா்கள் அனைவரும், மீனவா் கண்ணன் (45) என்பவரின் படகில் கடலில் குளிப்பதற்காக முகத்துவாரப் பகுதிக்குச் சென்றனா். அனைவரும் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, வேலுவிடம் யோகாசனப் பயிற்சி பெறும், நவீன் என்பவா் அலையில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரைக் காப்பாற்ற முயன்ற வேலுவும், அடித்துச் செல்லப்பட்டாா்.

இருவரையும் காப்பாற்ற முயன்ற கண்ணன், நவீனை மட்டும் மீட்டு கடற்கரைக்கு அழைத்து வந்தாா். பின்னா், படகில் சென்று வேலுவை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சோ்த்தாா்.

அங்கு வேலுவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இந்நிலையில், கண்ணன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து, திருப்பாலைவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com