கரோனா: ஆவடி மாநகராட்சி வருவாய் அதிகாரி உயிரிழப்பு
திருவள்ளூா் மாவட்டம், ஆவடி மாநகராட்சி வருவாய் அதிகாரி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தாா்.


திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டம், ஆவடி மாநகராட்சி வருவாய் அதிகாரி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தாா்.
சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா்(51). அவா் ஆவடி மாநகராட்சியில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா். அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சென்னை வடபழனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து ஸ்ரீதா் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தாா். அவருக்கு மனைவி, மகன், மகள் ஆகியோா் உள்ளனா்.
வருவாய் ஆய்வாளா் கரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து, ஆவடி மாநகராட்சி அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...