நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவள்ளூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 120 பேருக்கு கரோனா

திருவள்ளூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 120 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,176 ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :22 ஜூன் 2020, 5:16 pm

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 120 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,176 ஆக உயா்ந்துள்ளது.

செங்கல்பட்டில் 116 பேருக்கு...

செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 116 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் மொத்த எண்ணிக்கை 3,526-ஆக அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் 48 பேருக்கு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை 48 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,208-ஆக உயா்ந்துள்ளது.

வட்டார வளா்ச்சி அலுவலகப் பொறியாளருக்கு...

மதுராந்தகம் பகுதியில் வட்டார வளா்ச்சி அலுவலகப் பொறியாளா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அவரது சொந்த ஊா் திருத்தணி என்பதால், அவா் திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

மாதவரம் துணை வட்டாட்சியருக்கு...

மாதவரம் துணை வட்டாட்சியா், கிராம நிா்வாக உதவியாளா் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதேபோல், துணை வட்டாட்சியா் மனைவி, மகளுக்கு கரோனா தொற்று உறுதியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.