ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருப்பதி குடை: பெரியபாளையத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகில் திருப்பதி குடை வந்து சென்றது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News image
திருப்பதி குடை.
Updated On :19 செப்டம்பர் 2020, 1:13 pm

DIN

பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகில் திருப்பதி குடை வந்து சென்றது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருப்பதி யாத்திரை குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு திருக்குடை எடுத்துச் செல்வார்கள். இதை முன்னிட்டு இந்த ஆண்டு 16 ஆம் ஆண்டு திருப்பதி திரு குடை கொண்டு செல்லும் நிகழ்ச்சி தாமரைப்பாக்கம் கூட்ரோடு வெங்கல் வழியாக பெரியபாளையத்து அடைந்தது. 

அப்போது பெரியபாளையத்தில் பக்தர்கள்  பெருமாள் உற்சவர் வைத்த வாகனம் வந்ததும் அங்கு திரளான பக்தர்கள்  சமூக அறிவுரையை பின்பற்றி கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என கோஷங்களை எழுப்பி  சுவாமி தரிசனம் செய்தனர். அங்கு வந்த பக்தர்களுக்கு பூபலம் பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் பின்பு பாலவாக்கம் ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் இல் இரவு தங்கி இருந்து நாளை காலை யாத்திரிகள் தெரிவித்தனர். வழிநெடுகிலும் திருப்பதி கொடைக்கு பக்தர்கள் தீபாராதனைக் காட்டியும் அன்னதானம் வழங்கியும் பெருமாள் ஆசி பெற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.