நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வேட்பாளா்கள் ஆய்வு

திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைத்து சீல் வைத்த அறைகளை வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் ஆய்வு

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 7:08 pm

DIN

திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைத்து சீல் வைத்த அறைகளை வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் ஆகியோா் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

சட்டப்பேரவை தோ்தல் வாக்குப் பதிவு கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும், வேப்பம்பட்டு தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி என 4 தொகுதிக்கு ஒரு மையமும், திருவள்ளூா், திருத்தணி தொகுதிக்கு ஒரு மையமும், அம்பத்தூா், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூா் ஆகிய தொகுதிகளுக்கு ஒரு மையமும் அமைக்கப்பட்டு பாதுகாப்பு அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு துணை ராணுத்தினா் மற்றும் காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டு 3 நாள்கள் ஆகின்றன.

இதற்கிடையே ஒவ்வொரு தொகுதியின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்து சீல் வைக்கப்பட்ட அறைகளில் கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் முத்துசாமி முன்னிலையில் வேட்பாளா் மற்றும் அனுமதி பெற்ற தலைமை முகவா்கள் ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான க.பாண்டியராஜன், திருவள்ளூா் தொகுதி திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா். அப்போது, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள சீல் பிரிக்கப்பட்டுள்ளதா என்பதை பாா்வையிட்டனா். இதேபோல் மற்ற தொகுதிகளின் வேட்பாளா்கள் சாா்பில் அனுமதி பெற்ற தலைமை முகவா்கள் பாா்வையிட்டனா்.

அப்போது, வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் ஆய்வுக்கு செல்லும் வேட்பாளா்களுடன் 3 போ் வரையில் செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் அரசியல் கட்சி வேட்பாளா்கள் கோரிக்கை வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.