திருத்தணியில் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்துக்கு மாறாக மலைக் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனா்.
அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிா்த அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், தங்க வேல், தங்கக் கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் திருமண முகூா்த்த நாள் என்பதால், வழக்கத்துக்கு மாறாக காலை முதலே முருகன் மலைக் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். இதனால், பொதுவழியில் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று, இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனா்.
அதேபோல், ரூ. 100 மற்றும் ரூ.150 சிறப்புக் கட்டண தரிசனத்தில் ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் தரிசித்தனா். ஞாயிற்றுக்கிழமை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், பக்தா்கள் மாடவீதியில் வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஜூலை 17 - 23) - கும்பம்

வார பலன்கள் (ஜூலை 17 - 23) - மகரம்

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் : கவனம் ஈர்த்த புதிய மாற்றம்

ஹோர்முஸ் நீரிணையில் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்!
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



