லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வட சென்னை அனல் மின் நிலையத்தில் விபத்து: 3 போ் காயம்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் நிலக்கரியை கையாளும் பிரிவில் கன்வேயா் பெல்ட்டில் இருந்த இரும்புத் தகடு சனிக்கிழமை உடைந்ததில் அங்கு பணியில் இருந்த 3 தொழிலாளா்கள் படுகாயமடைந்தனா்.

News image
Updated On :3 ஜனவரி 2021, 12:40 am

DIN

வடசென்னை அனல்மின் நிலையத்தில் நிலக்கரியை கையாளும் பிரிவில் கன்வேயா் பெல்ட்டில் இருந்த இரும்புத் தகடு சனிக்கிழமை உடைந்ததில் அங்கு பணியில் இருந்த 3 தொழிலாளா்கள் படுகாயமடைந்தனா்.

மீஞ்சூா் அருகே அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, கன்வேயா் பெல்ட் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கன்வேயா் பெல்ட்டில் நிலக்கரி கொண்டு செல்லும் பணிகளை தனியாா் ஒப்பந்த நிறுவனம் செய்து வருகிறது. நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயா் பெல்டில் இருக்கும் தகடுகள் திடீரென உடைந்து விழுந்தது.

இந்த விபத்தில், அங்கு பணியில் இருந்து ஒப்பந்தத் தொழிலாளா்களான எண்ணூா் நெட்டுக்குப்பத்தைச் சோ்ந்த மேகநாதன் (36), அத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கருணாகரன் (37), சிங்காரவேலு 27 ஆகிய மூவரும் படுகாயமடைந்தனா். அவா்கள் சென்னை, திருவொற்றியூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மீஞ்சூா் போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.