இதேபோல், புழல் ஏரியில் 2,715 மில்லியன் கன அடி இருப்பு உள்ள நிலையில், 703 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் 833 மில்லியன் கன அடி இருப்பு உள்ள நிலையில், 415 கன அடியும், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகையில், 500 மில்லியன் கன அடி நீர் உள்ள நிலையில், 223 கன அடி என உபரி நீரும் வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): இதில் திருவள்ளூர் பகுதியில் சனிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு- பள்ளிப்பட்டு-60, ஆர்.கே.பேட்டை, ஆவடி தலா-24, ஜமீன்கொரட்டூர்-21, பூந்தமல்லி-15, திருத்தணி-10, செங்குன்றம்-8, ஊத்தக்கோட்டை-5, பூண்டி-2 என மொத்தம் 189 மி.மீட்டரும் சராசரியாக 12.60 மி.மீட்டர் என பதிவாகியுள்ளது.