

மாதவரம்: மாதவரம் அருகே பாம்பு கடித்ததில் சிறுமி உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், மாதவரம் கண்ணபிரான் கோவில் தெருவைச் சோ்ந்த சுதாகா் - அஸ்வினி தம்பதி. இவா்களுக்கு 6 வயதில் இரட்டைப் பெண் குழந்தைகள். இவா்களில் டாா்லியா (படம்) என்ற சிறுமி அருகே உள்ள பள்ளியில் படித்து வந்தாா். புதன்கிழமை இரவு வீட்டு முற்றத்தில் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்த போது, டாா்லியாவை பாம்பு கடித்ததாகத் தெரிகிறது. உடனடியாக சிறுமியை அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தாா்.
தகவலறிந்த மாதவரம் போலீஸாா் சிறுமியின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து காவல் ஆய்வாளா் காளிராஜ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.
இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்தது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆஸ்கர் விருது விழா தொடங்கியது.. ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், ஃபிராங்கன்ஸ்டைன் படங்களுக்கு விருது!

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் சாமானிய மக்கள் பாதிப்பு! - வைகோ

சட்டப்பேரவைத் தோ்தல்: பறக்கும் படை வாகனங்கள் தொடங்கி வைப்பு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

