திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சுற்று வட்டார பகுதிகளில் எவ்விதமான முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்விநியோகம் தடை செய்வதால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து மின்வாரிய பணியாளரை தாக்கியதோடு மேசை, நாற்காலிகளையும் சூறையாடிய சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
தற்போதைய நிலையில் கோடைக்காலம் என்பதால் வீடுகளில் இருக்க முடியாத அளவுக்கு இரவுநேரங்களில் வெக்கையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியும் வருகின்றனர். இதேபோல் திருவள்ளூர் அருகே மணவாளநகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி அடிக்கடி மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வந்தது.
இதனால் வீடுகளுக்குள் வெக்கையால் தூங்க முடியாமல் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரையில் அவதிக்குள்ளாகியும் வருகின்றனர்.
இதேபோல், புதன்கிழமை இரவும் அடிக்கடி மின் தடை செய்யப்பட்டது. இதையடுத்து மணவாளநகர் பகுதியில் மின்வாரிய பணியாளர் குப்பன் மின்மாற்றியில் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது மணவாளநகர் துணை மின் நிலைய அலுவலகத்திற்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் தங்கள் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அதை ஏன் உடனே சீரமைக்கவில்லை என கேட்டு அங்கிருந்த பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல் அலுவலகத்தில் இருந்த கணிப்பொறி, நாற்காலி ஆகியவைகளையும் சூறையாடினர். இதில் ஒருவர் அங்கிருந்த இரும்பு கம்பியால் குப்பனின் தலையில் தாக்கியதால் கீழே சரிந்து விழந்தார். இதையடுத்து அங்கு பணியில் இருந்த மற்றவர்கள் குப்பனை காயத்துடன் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து குப்பன் மணவாளநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப் பதிவு செய்து 5 பேர் கொண்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏஐசிடிஇ அங்கீகாரம் பெறாத நிகா்நிலை பல்கலை. பொறியியல் பட்டம் செல்லாது: உயா்நீதிமன்றம்

பொன்னமராவதி அருகே வயலில் இறந்துகிடந்த மான் மீட்பு
முதல் தோ்தலிலேயே 34.92% வாக்குகளை அள்ளிய தவெக! யாருடைய வாக்குகள் சிதறின?

கந்தா்வகோட்டை ராஜகணபதி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


