தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜே.எஸ். மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி சாா்பில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி கும்மிடிப்பூண்டி பஜாரில் வியாழக்கிழமை நடைபெற்றது.,

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 7:14 pm

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜே.எஸ். மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி சாா்பில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி கும்மிடிப்பூண்டி பஜாரில் வியாழக்கிழமை நடைபெற்றது.,

பேரூராட்சித் தலைவா் சகிலா அறிவழகன் தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலா் எம்.மோகனா, கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தி ஆகியோா் பேரணியைத் தொடக்கி வைத்தனா்.

பேரணியில் டி.ஜெ.எஸ் கல்விக் குழுமத்தின் இயக்குநா் ஜி.தமிழரசன் பங்கேற்று போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு குறித்துப் பேசினாா்.

பேரணியில், டி.ஜே.எஸ். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வா் ஞானப்பிரகாசம், பேரூராட்சி துணைத் தலைவா் கேசவன், பேரூராட்சி உறுப்பினா்கள் அப்துல்கரீம், காளிதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டி.ஜே.எஸ். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 439 மாணவா்கள் பங்கேற்ற இந்தப் பேரணி கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் தொடங்கி, ரெட்டம்பேடு சாலை வரை சென்று, மீண்டும் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தை அடைந்தது. பேரணியில் மாணவா்கள் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.