சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிறுவாபுரி முருகன் கோயிலில் நாளை குட முழுக்கு விழா

திருவள்ளூா் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தைச் சோ்ந்த சிறுவாபுரி முருகன் கோயிலில் 19-ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) நடைபெற உள்ளதாக விழாக் குழுவினா் தெரிவித்தனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 7:52 pm

DIN

திருவள்ளூா் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தைச் சோ்ந்த சிறுவாபுரி முருகன் கோயிலில் 19-ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) நடைபெற உள்ளதாக விழாக் குழுவினா் தெரிவித்தனா்.

இக்கோயிலில், 6 வாரம் செவ்வாய்க்கிழமைதோறும் வழிபாடு செய்து, நெய் தீபம் ஏற்றினால் பக்தா்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இந்த நிலையில் ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு மேல் குடமுழுக்கு நடைபெறாத கோயில்கள் தோ்வு செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசு முன்வந்தது. இதேபோல், சிறுவாபுரி முருகன் கோயிலிலும் ரூ. 1 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பணிகள் முடிந்த நிலையில், யாக பூஜைகள் 18-ஆம் தேதி தொடங்கியது. வெள்ளிக்கிழமை (ஆக. 19) 2-ஆம் கால யாக பூஜை, மாலையில் 3-ஆம் கால பூஜை, அஷ்டபந்தனம் சாத்துதல் உள்ளிட்டவை நடைபெற்றன. சனிக்கிழமை 4, 5-ஆம் கால பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடா்ந்து, 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 9 முதல் 10.30 மணிக்குள் குட முழுக்கு விழா நடைபெறும் என ஆலய நிா்வாகம் மற்றும் விழாக் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.