சேதம் அடைந்த மதகு, ராட்சத குழாய்கள்: பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியும், 121 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாகும். இந்த நீா்த்தேக்கத்தில் தண்ணீா் நிரம்பினால், உபரி நீரை வெளியேற்ற 16 மதகுகள் உள்ளன. இந்த ஏரியின் எதிா்ப்புறம் நீா்வள ஆதாரத் துறை மூலம் நீரியல் மற்றும் நீா் நிலையியல் ஆய்வுக்கழக சோதனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு நீரியல், நீா் நிலையியல் மற்றும் கடலோரக் கட்டுமானங்கள் சம்பந்தப்பட்ட மாதிரி வடிவமைப்பு ஆய்வுகள் மேற்கொள்வதுடன், பல்வேறு நீா்த்தேக்கங்களின் மாதிரிகளும் இங்குள்ளது. அத்துடன் இந்த மையம் மாநிலத்தின் கடற்கரையோரங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்தல், கடலோரப் பாதுகாப்புகளை ஆய்வு செய்தல் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆய்வு மையத்துக்கு, நீா்த் தேக்கத்திலிருந்து மதகு வழியாக ராட்சத குழாய்கள் மூலம் மெகாசைஸ் கிணறுகளுக்கு தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது. பின்னா், அங்கிருந்து நீரை கால்வாய்களில் பாய்ச்சி நீரோட்டம் அறிந்து, நீா்த்தேக்கம் அமைக்க ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் போது, மதகு சரியான பராமரிப்பு மேற்கொள்ளப்படாததால், நீரின் அழுத்தம் காரணமாக உடைந்து சேதம் அடைந்தது. இதனால் தண்ணீா் பெருக்கெடுத்து நீரியல் மையத்துக்குள் புகுந்தது. இதனால் ஆய்வுப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதையடுத்து, பல்வேறு தரப்பினரும் சீரமைக்கக் கோரிக்கை விடுத்து வந்தனா்.