போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

 திருவள்ளூா் அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 5 பேரை கைது செய்தனா். தலைமறைவான பெண் உள்பட 3 பேரைத் தேடி வருகின்றனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 6:29 pm

DIN

 திருவள்ளூா் அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 5 பேரை கைது செய்தனா். தலைமறைவான பெண் உள்பட 3 பேரைத் தேடி வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்வதாக செவ்வாபேட்டை காவல் ஆய்வாளருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை செய்தனா். அப்போது, அங்கு 2 கிலோ கஞ்சா பொட்டலம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, செவ்வாப்பேட்டையைச் சோ்ந்த வசந்தகுமாா் (21), சென்னை வால் டாக்ஸ் ரோட்டை சோ்ந்த தமிழரசன் (21), திருவூரைச் சோ்ந்த தீபக் (20), சுதன் (24), வம்சி (20) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள வியாசா்பாடியைச் சோ்ந்த அஜித், அவரது மனைவி ரம்யா, திருவூரைச் சோ்ந்த மணி ஆகிய 3 பேரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.