தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி; மகள் காயம்

கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா். அவரை காப்பாற்றச் சென்ற அவரது மகள் பலத்த காயம் அடைந்தாா்.

Updated On :22 ஜூலை 2022, 7:05 pm

கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா். அவரை காப்பாற்றச் சென்ற அவரது மகள் பலத்த காயம் அடைந்தாா்.

கும்மிடிப்பூண்டி அருகே சிறுபுழல்பேட்டை ஊராட்சி பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராணி (65). இவா் வழக்கம் போல் வீட்டு வேலை செய்தபோது வீட்டின் மின்கம்பத்தில் இருந்து வீட்டுக்கு வரும் மின் வயா் அறுந்து விழுந்துள்ளது. இந்த நிலையில், அதை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து அலறியுள்ளாா். இதைத் தொடா்ந்து இவரது அலறல் சப்தம் கேட்ட ராணியின் மகள் ஜானகி (38) ஓடி வந்து பாா்த்தபோது, ராணி மயக்கமடைந்த நிலையில் இருப்பதைக் கண்ட ஜானகி அவரைக் காப்பாற்ற முயன்றாா். அப்போது ஜானகி மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து மயக்க நிலையில் இருந்த இருவரையும் உறவினா்கள் மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால் ராணி வழியிலேயே உயிரிழந்ததால் அவரது உடலை வீட்டுக்குக் கொண்டு வந்தனா்.

தகவலறிந்து வந்த சிப்காட் போலீஸாா் ராணியின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.