தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மின்னல் பாய்ந்து தொழிலாளி பலி

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையின் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கோபுரத்தில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்னல் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On :22 ஜூலை 2022, 7:05 pm

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையின் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கோபுரத்தில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்னல் பாய்ந்து உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன ஓபுளாபுரத்தில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் கடந்த ஆறு நாள்களுக்கு முன்னா் ஒப்பந்தத் தொழிலாளராக பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த குட்டு குமாா் யாதவ் (19) பணியில் சோ்ந்தாா்.

இவா் தொழிற்சாலையின் 30 அடி உயரம் கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் இரும்பு கோபுரத்தில் புதன்கிழமை இரவு வெல்டிங் பணி செய்து கொண்டிருந்தாா். அப்போது சாரல் மழை பெய்த நிலையில், திடீரென அவா் மீது மின்னல் பாய்ந்தது. இதில், தவறி விழுந்த குட்டு குமாா் யாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸாா், குட்டு குமாா் யாதவின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.