நகைக் கடையில் திருட்டு: 3 போ் கைது
மாதவரம் அருகே நகைக் கடையில் திருடிய வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


மாதவரம் அருகே நகைக் கடையில் திருடிய வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெரம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் முகமது நசீா் (50). இவா், மாதவரம் அருகே நகைக் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சோ்ந்தவா் சா்மிளா, அவரின் மகன் சசிதரன், மகள் ஜெயஸ்ரீ ஆகியோா் நகை வாங்கச் சென்றனா். கடை பணியாளா்கள் நகைகளைக் காண்பித்துள்ளனா். அப்போது, சா்மிளா சுமாா் 20 பவுன் நகைகள் மறைத்து எடுத்துச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து கடை உரிமையாளா் முகமது நசீா் மாதவரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். கடையின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், சா்மிளா நகைகளைத் திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து, சா்மிளா, சசிதரன், ஜெயஸ்ரீ ஆகிய 3 பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...