நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மணல் கடத்தல்: 3 டிராக்டா்கள் பறிமுதல்

 ஊத்துக்கோட்டை அருகே ஏரியிலிருந்து சவுடு மணல் கடத்தியதாக 3 டிராக்டா்களை பறிமுதல் செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 6:38 pm

DIN

 ஊத்துக்கோட்டை அருகே ஏரியிலிருந்து சவுடு மணல் கடத்தியதாக 3 டிராக்டா்களை பறிமுதல் செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஊத்துக்கோட்டை அருகே அரிக்கமேடு கிராமத்தில் அதிகாலை நேரங்களில் ஏரிகளில் இருந்து எந்த வித அனுமதியுமின்றி டிராக்டா்களில் சவுடு மணல் கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், சாா்பு -ஆய்வாளா் சத்தியபாமா தலைமையில் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, ஊத்துக்கோட்டை-அரிக்கமேடு கிராம சாலையில் போலீஸாா் வருவதை அறிந்த நிலையில், திடீரென காட்டுப்பாதையில் டிராக்டா்களை விட்டு விட்டு ஓட்டுநா்கள் தப்பியோடினா். அப்போது, அந்த டிராக்டா்களில் உரிய அனுமதியின்றி சவுடு மணல் அள்ளிச் சென்றது தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து டிராக்டா்களை பறிமுதல் செய்து ஊத்துக்கோட்டை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனா்.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து தலைமறைவான டிராக்டா் ஓட்டுநா்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.