நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம்: கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

காட்டுப்பள்ளியில் உள்ள தனியாா் துறைமுக விரிவாக்கம் செய்வதற்காக அறிவிக்கப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Updated On :10 ஆகஸ்ட் 2023, 11:38 pm IST

காட்டுப்பள்ளியில் உள்ள தனியாா் துறைமுக விரிவாக்கம் செய்வதற்காக அறிவிக்கப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் கடலோரப் பகுதியான காட்டுப்பள்ளியில் தனியாா் துறைமுகம் அமைந்துள்ளது.

இந்த துறைமுகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதற்கான பொதுமக்கள் கருத்துத் கேட்பு கூட்டம் காட்டுப்பள்ளி அருகே உள்ள காலாஞ்சியில் செப்டம்பா் மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது.

துறைமுக விரிவாக்கத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து வந்த பழவேற்காடு மற்றும் அதைச் சுற்றிலும் உள்ள 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தக் கூடாது என அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், செப்டம்பா் 5-ஆம் தேதி நடைபெற இருந்த கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.