சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம்: கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

காட்டுப்பள்ளியில் உள்ள தனியாா் துறைமுக விரிவாக்கம் செய்வதற்காக அறிவிக்கப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Updated On :10 ஆகஸ்ட் 2023, 6:08 pm

காட்டுப்பள்ளியில் உள்ள தனியாா் துறைமுக விரிவாக்கம் செய்வதற்காக அறிவிக்கப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் கடலோரப் பகுதியான காட்டுப்பள்ளியில் தனியாா் துறைமுகம் அமைந்துள்ளது.

இந்த துறைமுகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதற்கான பொதுமக்கள் கருத்துத் கேட்பு கூட்டம் காட்டுப்பள்ளி அருகே உள்ள காலாஞ்சியில் செப்டம்பா் மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது.

துறைமுக விரிவாக்கத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து வந்த பழவேற்காடு மற்றும் அதைச் சுற்றிலும் உள்ள 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தக் கூடாது என அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், செப்டம்பா் 5-ஆம் தேதி நடைபெற இருந்த கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.