மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவள்ளூரில் திமுக உண்ணாவிரதம்

நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசையும், தமிழ்நாடு ஆளுநரையும் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக இளைஞர் அணி,

News image
Updated On :20 ஆகஸ்ட் 2023, 8:15 am

DIN

நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசையும், தமிழ்நாடு ஆளுநரையும் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணியினர் திரளாக பங்கேற்றனர்.

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக “நீட் தேர்வு உள்ளது. இத்தேர்வு   மாணவர்களை மட்டுமின்றி, பெற்றோர்களையும் மரணக்குழியில் தள்ளும் “நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய பாஜக அரசையும், பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநரையும் கண்டித்து ஒவ்வொரு மாவட்ட தலைநகர்களிலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவும் என திமுக தலைவர், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்கவும், திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்பேரில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் அரசு மருத்துவக்கல்லூரி நுழைவு வாயில் முன்பு ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் சா.மு.நாசர்(மத்திய மாவட்டம்), டி.ஜெ. கோவிந்தராஜன்(கிழக்கு), திருத்தணி எஸ். சந்திரன்(மேற்கு) ஆகியோர் தலைமை வகித்து தொடங்கி வைத்தனர். இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூர்), ஆ.கிருஷ்ணசாமி(பூந்தமல்லி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சி.எச்.சேகர், மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ம.கிரண், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஏ.முரளி சேனா, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் ஆ.சாம் ஜெபராஜ் ஆகியோர் வரவேற்றனர். 

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி எம்.பூபதி, மாவட்ட நிர்வாகிகள் கே.திராவிடபக்தன், வழக்குரைஞர் பிரிவு அமைப்பாளர் பி.கே.நாகராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் டாக்டர் வி.சி.ஆர்.குமரன், உதயமலர் பாண்டியன், ஜெயபாலன், முன்னாள் நகர் மன்ற பொன்.பாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், துணைத்தலைவர் பர்கத்துல்லாகான், ஒன்றிய செயலாளர்கள் கொண்டஞ்சேரி மோ.ரமேஷ், கிறிஸ்டி, ஒன்றிய துணைச்செயலாளர் சித்ராரமேஷ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் விஜயகுமாரி சரவணன், சிவசங்கரி, சரஸ்வதி சந்திரசேகரன், மாவட்ட துணை அமைப்பாளர் மோதிலால், வார்டு உறுப்பினர்கள் அருணா ஜெயகிருஷ்ணா, டி.கே.பாபு, எல்லாபுரம் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.