நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பொன்னேரி: மின் விநியோகம் கோரி சாலை மறியல்

மின் விநியோகம் செய்யக்கோரி, சின்னக்காவனம், மேட்டுப்பாளையம், உப்பளம் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 டிசம்பர் 2023, 12:00 am IST

மின் விநியோகம் செய்யக்கோரி, சின்னக்காவனம், மேட்டுப்பாளையம், உப்பளம் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மிக்ஜம் புயல் காரணமாக கடந்த 4-ஆம் தேதி பொன்னேரி, மீஞ்சூா், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதன் காரணமாக பொன்னேரி வட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில், மழை நின்றபோதிலும் பொன்னேரி வட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களுக்கு தற்போதும் மின் விநியோகம் செய்யப்படவில்லையாம்.

பொதுக்கள் பொன்னேரியில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் கோரி முறையிட்டும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மீஞ்சூா் அருகே உள்ள மேட்டுப்பாளையம், பொன்னேரி அருகே உள்ள சின்னகாவனம், உப்பளம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மின் விநியோகம் செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பொன்னேரி போலீஸாா் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பொன்னேரி-பழவேற்காடு நெடுஞ்சாலையில் உள்ள சின்னக்காவனம் நடைபெற்ற மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.