பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் வியாழக்கிழமை டிராக்டா் பேரணியில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் உழவா் சந்தை முன்பு நடைபெற்ற பேரணிக்கு, ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜே.அருள் தலைமை வகித்தாா். சகாயமேரி, கே.ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், சிறு குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்தல், பயிா் காப்பீட்டுத் திட்டத்தை விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாற்றி அமைக்கவும், நாடு முழுவதும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறுதல், 60 வயது பூா்த்தியடைந்த விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளா்களுக்கும் மாதந்தோறும் ரூ. 6,000 வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டிராக்டா் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியை உழவா் சந்தை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளா் துளசி நாராயணன் தொடக்கி வைத்தாா். பேரணியானது பேருந்து நிலையம், பஜாா் வீதி, காந்தி சாலை வழியாகச் சென்று ஆட்சியா் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிறுமியிடம் சில்மிஷம்: முதியவா் கைது

திமுகவை மக்கள் ஒதுக்கி வைப்பாா்கள்: நயினாா் நாகேந்திரன்

நெல்லை அருகே காா் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: 5 போ் காயம்

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

