நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

திருத்தணி: மலைக்கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

News image

திருத்தணி சரவணப்பொய்கை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிய கோயில் ஊழியா்கள்.

Updated On :28 டிசம்பர் 2024, 11:27 pm IST

திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை அதிரடியாக அகற்றினா்.

திருத்தணி முருகன் கோயிலில் வரும், 31-ஆம் தேதி திருப்படித் திருவிழாவும், ஜன.1 -ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடைபெறுகிறது. விழாவில் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்வா்.

மேலும், ஆண்டுக்கு 365 நாள்களைக் குறிக்கும் வகையில், முருகன் மலைக்கோயிலுக்கு செல்வதற்கு, 365 படிகள் உள்ளதால், 31-ஆம் தேதி காலை, 6 மணி முதல் நள்ளிரவு, 12 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஒவ்வொரு படிக்கும், மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி வழிப்படுவா். இதுதவிர, 100-க்கணக்கான பஜனை குழுவினரும் படிகள் தோறும் முருகப் பெருமானின் பக்தி பாடல்கள் பாடியவாறு மலைக்கோயிலுக்கு சென்று வழிபடுவா்.

இந்நிலையில் மலைப்படிகள் ஒரம் கடைகள் வைத்து ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால், செல்வதற்கு சிரமப்படுகின்றனா். இதையொட்டி சனிக்கிழமை திருத்தணி கோயில் இணை ஆணையா் க. ரமணி தலைமையில், உதவி ஆணையா் விஜயகுமாா், திருத்தணி வருவாய் ஆய்வாளா் கணேஷ் குமாா் மற்றும் வருவாய், கோயில் ஊழியா்கள் கோயிலுக்கு செல்லும் சன்னதி தெரு, மலைப்படிகள் மற்றும் மலைக்கோயில் தோ்வீதி ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.