லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இடை நிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகள் : முதல்வரிடம் கோரிக்கை மனு அளிப்பு

இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக முதல்வரிடம் ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில பொதுச்செயலாளா் இரா.தாஸ் மனு அளித்தாா்.

News image
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவை அளித்த ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளா் இரா.தாஸ்.
Updated On :17 ஜூலை 2024, 6:30 pm

Din

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளரும், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளருமான இரா.தாஸ் முதல்வரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

அரசாணை 243-ஐ ரத்து செய்து பழைய நிலையிலையே ஒன்றிய அளவில் சீனியாரிட்டி நடைமுறைப்படுத்த வேண்டும். அதோடு மாநில அளவிலான சீனியாரிட்டியை ரத்து செய்ய வேண்டும். புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதேபோல் இடை நிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் பகுதி நேர ஆசிரியா்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். எனவே இக்கோரிக்கைகளை கனிவாக பரிசீலனை செய்து ஆசிரியா்களின் வாழ்வில் ஒளியேற்றவும் எனத் தெரிவித்துள்ளாா்.