ஆவடி மாநகராட்சி புதிய ஆணையராக எஸ்.கந்தசாமி புதன்கிழமை பொறுப்பேற்றார்.
ஆவடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த எஸ்.ஷேக் அப்துல் ரகுமான், நகராட்சி நிர்வாகத் துறை இணை ஆணையராக திங்கள்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து புதிய ஆணையராக சென்னை விருந்தினர் மாளிகையின் வரவேற்பு அலுவலர் மற்றும் இணை மாநில மரபு அலுவலராகப் பணியாற்றிய எஸ்.கந்தசாமி நியமனம் செய்யப்பட்டார்.
இதையடுத்து புதன்கிழமை ஆவடி மாநகராட்சி ஆணையராக எஸ்.கந்தசாமி பொறுப்பேற்றார். இவருக்கு மாநகராட்சி கூடுதல் ஆணையர்கள் சங்கரன், மாரிசெல்வி, மாநகர பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் சத்தியசீலன், உதவி பொறியாளர்கள் குமார், துர்கா தேவி, நகர் நல அலுவலர் ராஜேந்திரன், நகரமைப்பு அலுவலர் பாஸ்கரன், சுகாதார அலுவலர்கள் முகைதீன், குமார், ஜனார்த்தனன் உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.