மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பூந்தமல்லியில் தீப்பிடித்து எரிந்த லாரிகள்

பூந்தமல்லி அருகே ஞாயிற்றுக்கிழமை ரசாயனப் பொருள்களை கண்டெய்னர் லாரியில் இறக்கிய போது, கீழே விழுந்ததில் 2 லாரிகள் தீப்பற்றி எரிந்தன.

News image

பூந்தமல்லி அருகே தீப்பிடித்த எரிந்த கண்டெய்னர் லாரி

Updated On :29 ஜூலை 2024, 2:58 am IST

பூந்தமல்லி அருகே ஞாயிற்றுக்கிழமை ரசாயனப் பொருள்களை கண்டெய்னர் லாரியில் இறக்கிய போது, கீழே விழுந்ததில் 2 லாரிகள் தீப்பற்றி எரிந்தன.

இந்த நிலையில், நசரத்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு தேவையான, "தின்னர்' என்ற ரசாயனப் பொருள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கன்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்டது.

அந்த தொழிற்சாலை அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரியில் இருந்து, ரசாயன பொருள்களின் கேன்களை இறக்கி மற்றொரு லாரிக்கு ஊழியர்கள் மாற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக ஒரு கேன் தவறி விழுந்ததால், கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைப் பார்த்த ஊழியர்கள் உள்ளிட்டோர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ மற்றொரு லாரிக்கும் பரவியது. இதையடுத்து, அந்த லாரியில் பற்றிய தீயை தொழிலாளர்கள் உடனடியாக அணைத்தனர். அச்சமயம் தொழிற்சாலை அருகே இருந்த வாகன நிறுத்துமிடத்தில் நின்ற கன்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட 50}க்கு மேற்பட்ட வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைக்கு தீ பரவாமலிருப்பதற்காக, தீப்பிடித்து எரிந்த கண்டெய்னர் லாரியை ஓட்டுநர் சாதுரியமாக அங்கிருந்து ஓட்டி சென்று, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அணுகுச் சாலையில் நிறுத்தினார்.

இந்த நிலையில், கன்டெய்னர் லாரியில் பற்றிய தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. தகவலறிந்து வந்த பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், ஜெ.ஜெ.நகர், அம்பத்தூர், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.