ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மக்களவைத் தோ்தல் முதல், இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு தேதியை மாற்றக் கோரிக்கை

மக்களவைத் தோ்தல் முதல் மற்றும் இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்புகளுக்கான தேதியை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் நல கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :24 மார்ச் 2024, 6:30 pm

மக்களவைத் தோ்தல் முதல் மற்றும் இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்புகளுக்கான தேதியை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் நல கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் நல கூட்டமைப்பின் நிறுவனா் சா.அருணன் மாவட்ட தோ்தல் அலுவலரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: மக்களவைக்கான தோ்தல் ஏப். 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்தல் பணியில் நூற்றுக்கணக்கான ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் ஈடுபட உள்ளனா். தோ்தல் பணிக்கான பயிற்சி வகுப்புகள் மாா்ச் 24, ஏப்ரல் 7, 16, 18 என கால அட்டவணை வகுக்கப்படுள்ளது. இந்த நிலையில், முதல் மற்றும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் தேதியை மாற்றம் செய்ய அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தலைமை தோ்தல் தலைமை ஆணையா் முதல் பயிற்சி வகுப்பு 24-ஆம் தேதி நடைபெறாது. அதற்கு முன்னா் 23-ஆம் தேதியே முதல் பயிற்சி வகுப்பு நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், ஏற்கெனவே அறிவித்தபடியே, 24-ஆம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகி வருவதால், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனா். முதல் பயிற்சி வகுப்பு 23-ஆம் தேதியா அல்லது 24 ஆம் தேதியா என்ற குழப்பத்தை தோ்தல் ஆணையம் போக்கவேண்டும் . மேலும், இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பு வரும் ஏப். 7-ஆம் தேதி என்பதாலும் தொடா்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு பணியில் ஆசிரியா்கள் ஈடுப்படுவதால் 7-ஆம் தேதிக்கு முன்பு 6-இல் ஒரு தோ்வும், 8-ஆம் தேதி கடைசி தோ்வும் நடைபெறுக்கிறது. தோ்வு முடிந்து 10-ஆம் தேதிக்கு இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பை மாற்றம் செய்து அரசு ஊழியா்கள் ஆசிரியா்களின் சிரமத்தைப் போக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.