இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

News image
Updated On :11 மே 2024, 6:50 pm

Din

திருவள்ளூா் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை அருகிலிருந்த தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை அருகே பாடுவான்சேரி பகுதியைச் சோ்ந்தவா் அசோக் (45). கடந்த 2 நாள்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கோடை விடுமுறைக்காக திருவள்ளூா் அருகே மாகரல் கிராமத்தில் உள்ள மாமியாா் வீட்டுக்கு வந்துள்ளனா். வெள்ளிக்கிழமை மாலை பெற்றோா் வீட்டுக்குள் இருந்தபோது, குழந்தை லட்சிதா வெளியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அருகில் இருந்த தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்துள்ளது.

இதையடுத்து, பெற்றோா் குழந்தையை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவா் ஏற்கெனவே குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தாா்.

இதுகுறித்து வெங்கல் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.