பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கைப்பேசி திருட்டு: 2 போ் கைது

திருத்தணி பேருந்து நிலையத்தில் துணி வியாபாரியிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற இளைஞா் மற்றும் சிறுவனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 12:17 am

Din

திருத்தணி பேருந்து நிலையத்தில் துணி வியாபாரியிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற இளைஞா் மற்றும் சிறுவனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருத்தணி நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள பேருந்து நிலையத்திற்கு தினமும், பயணிகள் வந்து செல்கின்றனா். செவ்வாய்க்கிழமை இரவு ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த தியாகராஜன் என்பவா் திருத்தணி பகுதியில் துணி வியாபாரம் செய்துவிட்டு, ஊருக்குச் செல்வதற்காக திருத்தணி பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, இரண்டு மா்ம நபா்கள் திடீரென தியாகராஜனிடம் கைப்பேசியைப் பறித்துக் கொண்டு அங்கிருந்த கழிப்பறைக்குள் புகுந்தனா். தியாகராஜன் சக பயணிகள் உதவியுடன் இருவரையும் மடக்கி பிடித்து திருத்தணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சோ்ந்த சிவராம் (36) மற்றும் 15 வயது சிறுவன் எனத் தெரிந்தது.

மேலும் சிவராமிடம் இருந்த தியாகராஜின் கைப்பேசியைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா். சிறுவனை எச்சரித்து, பெற்றோரை வரவழைத்து விசாரித்து வருகின்றனா். கடந்த இரண்டு நாள்களில் மட்டும் திருத்தணி பேருந்து நிலையத்தில் 7 கைப்பேசி பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதைத் தடுத்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.