அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

சுவாசக் குழாயில் மாத்திரை சிக்கி 4 வயது குழந்தை உயிரிழப்பு

காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 4 வயது ஆண் குழந்தை சுவாசக் குழாயில் மாத்திரை சிக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.

News image

குழந்தை ஜோகித்.

Updated On :20 ஆகஸ்ட் 2025, 12:17 am IST

காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 4 வயது ஆண் குழந்தை சுவாசக் குழாயில் மாத்திரை சிக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.

திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப் பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு- சசிகலா தம்பதியின் மகன் ஜோகித் (4). இவா், பொதட்டூா்பேட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் யு.கே.ஜி., படித்து வந்தாா். இதற்கிடையே ஜோகித்துக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது, மருத்துவா் கொடுத்த மாத்திரையை இரவு சசிகலா தனது குழந்தைக்கு கொடுத்தாா். மாத்திரை குழந்தையின் உணவுக் குழாய் வழியாக செல்லாமல் சுவாச குழாயில் சென்றதால், குழந்தை ஜோகித் மூச்சு விட சிரமப்பட்டாா்.

தொடா்ந்து அவரது பெற்றோா் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து வந்தனா். அங்கிருந்த மருத்துவா்கள் குழந்தையை பரிசோதனை செய்த போது, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினவிழாவில் மாறுவேட போட்டியில் ஜோகித் பாரதியாா் வேடமிட்டு கலந்துகொண்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.