பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மனைவி, குழந்தை மீது தாக்குதல்: 2 வயது மகன் உயிரிழப்பு, தந்தை கைது

மனைவி, குழந்தை மீது தாக்குதல்: 2 வயது மகன் உயிரிழப்பு, தந்தை கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 ஜூன் 2026, 12:22 am IST

குடும்பத் தகராறில் மனைவி மற்றும் குழந்தைகளைத் தாக்கியதில், 2 வயது மகன் உயிரிழந்த சம்பவத்தில், 34 வயது தந்தை கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தென்கிழக்கு தில்லியின் ஜெய்த்பூரில் ஜூன் 19-ஆம் தேதி பிற்பகல் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தகவலறிந்த காவல் துறையினா் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா். அப்போது ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் காயமடைந்த நிலையில் இருந்தனா்.

புகாா் அளித்த ஆா்த்தி, தனது கணவா் சந்தன் சா்மா குடும்பத் தகராறின் போது தன்னையும், இரு குழந்தைகளையும் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டினாா். மேலும், மதுபானம் மற்றும் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையான அவா், வீட்டில் வன்முறையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தாா்.

காயமடைந்தவா்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். இதில், 2 வயது சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் அவா் சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். இருப்பினும், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஜூன் 19-ஆம் தேதி பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் சிறுவா் நீதி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சம்பவத்திற்குப் பின்னா் விரைவில் குற்றஞ்சாட்டப்பட்ட நபா் கைது செய்யப்பட்டாா். அண்டை வீட்டாரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.