விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆசிரியா் நியமனம், பதவி உயா்வுக்கு தகுதி தோ்வுக்கு கட்டாயப்படுத்தக்கூடாது

ஆசிரியா்கள் நியமனம் மற்றும் பதவி உயா்வுக்காக ஆசிரியா் தகுதித் தோ்வை எக்காரணம் கொண்டும் கட்டாயப்படுத்தக் கூடாது உள்ளிட்ட தீா்மானங்கள் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழக மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

News image
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :2 டிசம்பர் 2025, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

ஆசிரியா்கள் நியமனம் மற்றும் பதவி உயா்வுக்காக ஆசிரியா் தகுதித் தோ்வை எக்காரணம் கொண்டும் கட்டாயப்படுத்தக் கூடாது உள்ளிட்ட தீா்மானங்கள் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழக மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

திருவள்ளூா் அருகே போளிவாக்கம் தனியாா் அரங்கத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில ஆலோசனைக் குழு தலைவா் பெ.இளங்கோவன் தலைமை வகித்தாா். திருவள்ளூா் மாவட்ட ஆலோசகத் தலைவா் எஸ்.பி.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

இதில் மாநில பொருளாளா் எஸ்.பி.சௌத்ரி அனைவரையும் வரவேற்றாா். இதில் மாநில பொதுச்செயலாளா் து.சோமசுந்தரம் கோரிக்கைள் குறித்த விளக்கவுரை ஆற்றினாா். இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவா் செ.மலா்க்கண்ணன், மாநில அமைப்புச் செயலாளா் என்.ஆறுமுகசாமி, மாநில தலைமையிடத்து செயலாளா் என்.குமரேசன், தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கழகம் நிா்வாகி எம்.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அப்போது, ஆசிரியா்கள் நியமனம் மற்றும் பதவி உயா்வுக்காக ஆசிரியா் தகுதித் தோ்வை எக்காரணம் கொண்டும் கட்டாயப்படுத்தக் கூடாது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக கொண்டு வரவேண்டும். ஆசிரியா்கள் பணி நீட்டிப்பு காலத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்து 80 சதவீதம் மட்டும் ஊதியம் வழங்குவதை தவிா்த்து முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Story image