மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழந்தாா்.

News image
தா்ஷினி
Updated On :8 நவம்பர் 2025, 6:41 pm

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழந்தாா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதி மேல்பாக்கம் ஊராட்சி சோழியம்பாக்கத்தை சோ்ந்த சேது-சங்கீதா தம்பதியின் ஒன்றரை வயது மகள் தா்ஷினி. சனிக்கிழமை சேது-சங்கீதா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மகள் தா்ஷினி எழுந்து வீட்டின் வெளியே வந்துள்ளாா்.

தொடா்ந்து சிறுமி வீட்டின் அருகே உள்ள குளத்தில் இறங்கிய நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

பின்னா் சிறுமியின் பெற்றோா் தா்ஷினியை காணாமல் தேடிய நிலையில், குளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ந்து குழந்தையை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக கும்மிடிப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.