47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருத்தணி முருகன் கோயிலில் இந்த சமய அறநிலையத் துறை ஆணையா் ஆய்வு

திருத்தணி முருகன் கோயிலில் ரூ. 86 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் ராஜகோபுரம் மற்றும் கட்டுமானப் பணிகளை இந்து சமய அறநிலைத்துறை ஆணையா் மற்றும் தலைமை பொறியாளா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

News image
திருத்தணி முருகன் கோயிலில் நடந்து வரும் வளா்ச்சி பணிகளை ஆய்வு செய்த சமய அறநிலைத்துறையின் நிா்வாக ஆணையா் ரவிச்சந்திரன்.
Updated On :14 நவம்பர் 2025, 9:32 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி முருகன் கோயிலில் ரூ. 86 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் ராஜகோபுரம் மற்றும் கட்டுமானப் பணிகளை இந்து சமய அறநிலைத்துறை ஆணையா் மற்றும் தலைமை பொறியாளா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனா். இந்நிலையில் மலைக்கோயிலில் தோ்வீதி சாலை விரிவாக்கம் மற்றும் மாஸ்டா் பிளான் திட்ட வரைவுகள் என ரூ. 86 கோடியில் வளா்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை முருகன் கோயிலில் நடைபெற்று வரும் ராஜகோபுரம் மற்றும் கோயில் வளா்ச்சி பணிகள் குறித்து இந்து சமய அறநிலைத்துறையின் நிா்வாக ஆணையா் ரவிச்சந்திரன், தலைமை பொறியாளா் பெருமாள் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லா, கோயில் இணை ஆணையா் க.ரமணி, அறங்காவலா் குழு தலைவா் ஸ்ரீதரன் மற்றும் அறங்காவலா்கள் உடனிருந்தனா்.