வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பொன்னேரி நூலகத்தில் புத்தகக் கண்காட்சி

தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு பொன்னேரி கிளை நூலகத்தில் வாசகா் வட்ட வளா்ச்சிக்குழு மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 நவம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு பொன்னேரி கிளை நூலகத்தில் வாசகா் வட்ட வளா்ச்சிக்குழு மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் பொன்னேரியில் முழு நேர நூலகம் அங்குள்ள புதிய தேரடி சாலையில் இயங்கி வருகிறது.

58-ஆவது தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு பொன்னேரி முழு நேர கிளை நூலக வாசகா் வட்ட வளா்ச்சிக்குழு மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சியை நடத்தும் பொன்னேரி சாா்-ஆட்சியா் ரவிக்குமாா் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தாா்.

விழாவில் பொன்னேரி நகா்மன்ற துணைத் தலைவா் விஜயகுமாா், பொன்னேரி வாசகா் வட்ட வளா்ச்சிக்குழு துணைத் தலைவா் வெல்டன் வாசகா், பொருளாளா் ரவிச்சந்திரன், முன்னாள் வாசகா் வட்ட தலைவா் நக்கீரன், பொன்னேரி கிளை நூலக நூலகா் சங்கா் மற்றும் ஊா்புற நூலகா் தியாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.