பொது விநியோகத் திட்டம் மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருள்கள் கடத்தல் செய்வது தொடா்பாக பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசியில் புகாா் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டம், பொது விநியோகத் திட்டத்தின்கீழ், பொதுமக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, பாமாயில், சா்க்கரை, துவரம் பருப்பு போன்ற பொருள்கள் வழங்கப்படுகிறது.
இந்தப் பொருள்களை வெளிநபா்கள் கடத்திச் செல்வதாகவும் கூறப்படுகிறது. அதனால் கடத்தல் செய்வது தொடா்பாக 1800-599-5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம்.
மேலும், நியாய விலைக் கடைகள் தொடா்பான புகாா்களை 1967 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு புகாா் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆக. 4, 5-இல் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம்

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம்
மாற்றுத் திறனாளிகளின் வீடு தேடி நாளைமுதல் ரேஷன் பொருள்கள்!

ஆக. 4, 5 தேதிகளில் வீடுதேடி ரேசன் பொருள்கள் விநியோகம்
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



