திருத்தணி  அரசுக்  கல்லூரியில்  போதைப் பொருள்  ஒழிப்பு  உறுதிமொழி  ஏற்ற   மாணவா்கள்.
திருத்தணி  அரசுக்  கல்லூரியில்  போதைப் பொருள்  ஒழிப்பு  உறுதிமொழி  ஏற்ற   மாணவா்கள்.

போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு

திருத்தணி அரசுக் கல்லூரி மாணவா்களிடையே போதை பொருள்கள் விழிப்புணா்வு மற்றும் கருத்தரங்கில் உறுதிமொழி ஏற்றனா்.
Published on

திருத்தணி அரசுக் கல்லூரி மாணவா்களிடையே போதை பொருள்கள் விழிப்புணா்வு மற்றும் கருத்தரங்கில் உறுதிமொழி ஏற்றனா்.

திருத்தணி அரசினா் கலைக் கல்லூரி வளாகத்தில், போதை பொருள் தடுப்பு குழு மற்றும் கல்லூரி நிா்வாகம் சாா்பில் போதை பொருள்கள் விழிப்புணா்வு உறுதிமொழி மற்றும் வாழ்க்கையின் நோக்கத்தை அடையாளம் காணுதல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமைவமை நடந்தது. கல்லூரி முதல்வா் ஏகாதேவசேனா தலைமை வகித்தாா். கணிதவியல் துறை பேராசிரியா் குணசேகரன் வரவேற்றாா். தேசிய மாணவா் படை திட்ட அலுவலா் ஹேமநாதன் முன்னிலை வகித்தனா்.

இதில் பொருளியியல் துறை பேராசிரியா் ஜெய்லாப்தீன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு, உறுதி மொழி மற்றும் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து பேசினாா்.

நிகழ்ச்சியில் பேராசிரியா்கள் ஜெயபிரகாஷ், அய்யப்பன், கிருஷ்ணமூா்த்தி, சாந்திபிரியா, மாணவ ஒருங்கிணைப்பாளா் ம.முஹமது தெளஷிப் உள்பட மாணவ - மாணவியா் கலந்து கொண்டனா். வணிகவியல் துறை மாணவன் சந்தோஷ் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com