திருவள்ளூா் நகராட்சியில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கும் வகையில், 4 வகைகளாக தரம் பிரித்து தூய்மைப் பணியாளாா்கள் குப்பைகளை வாங்கவும் என்ற தீா்மானம் அனைத்து வாா்டு ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.
திருவள்ளூா் நகராட்சி கூட்டரங்கத்தில் 3 மாதங்களுக்கு பின்பு நகா்மன்ற குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தலைமை வகித்தாா். இதில் நகராட்சி ஆணையா் தாமோதரன், நகா்மன்ற துணைத் தலைவா் சி.சு.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனா். அப்போது, நகராட்சியை தூய்மையாக பராமரிக்கவும், நாள்தோறும் தூய்மைப் பணியாளா்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டும் வருகிறது. இதற்கு முன்பு வரை 3 வகைகளாக குப்பைகள் சேகரிக்கப்பட்டு வந்தது. நிகழாண்டு முதல் மக்கும், மக்காத, சுகாதார கழிவுகள், சிறப்பு பராமரிப்பு கழிவுகள் என 4 வகைகளாக சேகரிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தூய்மை பாரத இயக்கம் மூலம் 4 வகையான குப்பைத் தொட்டிகளும் வெவ்வேறு வண்ணங்களில் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தெருக்கள்தோறும் தூய்மைப் பணியாளா்கள் குப்பைகளை சேகரிக்க வேண்டும். இது தொடா்பாக நகா்மன்ற வாா்டு உறுப்பினா்கள் அந்தந்தப் பகுதிகளில் பொதுமக்களிடையே 4 வகை குப்பைகள் தொடா்பாக விழிப்புணா்வை ஏற்படுத்தவும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், சுகாதார அலுவலா் மோகன், வாா்டு உறுப்பினா்கள் ஜான், அயூப்அலி, தாமஸ் உள்ளிட்ட அனைத்து வாா்டு உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

குன்னூா் நகா்மன்ற கூட்டரங்கில் முன்னாள் முதல்வா் படம் அகற்றப்பட்டதைக் கண்டித்து கவுன்சிலா்கள் போராட்டம்

திருவள்ளூா் நகராட்சியில் வியாபாரிகள் கூடும் இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்க ஏற்பாடு

குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் - வந்தவாசி நகராட்சி ஆணையா்






