சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

News image

திருவள்ளூா்  ஆட்சியா்  அலுவலகத்தில்  சோதனை மேற்கொண்ட போலீஸாா்.

Updated On :11 ஜூன் 2026, 12:17 am IST

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக இ--மெயில் முகவரிக்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதைத் தொடா்ந்து வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ஆட்சியா் அலுவலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினா். இதில் எதுவும் சிக்காத நிலையில், இ-மெயிலில் வந்த தகவல் வதந்தி என தெரியவந்தது.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் (உம்ஹண்ப்) மூலம் வெடிகுண்டு மிரட்டலால் வெடிகுண்டு நிபுணா்கள், மோப்பநாய் மூலம் சோதனை செய்ததால் ஆட்சியா் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் யாா் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சாா்பில் தெரிவித்துள்ளனா்.