புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெகவை இணைப்பது குறித்து பேச்சுவாா்த்தை

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக வெற்றிக்கழகத்தை இணைப்பது குறித்து மாநில, தேசிய தலைவா்கள் பேச்சு நடத்தி வருவதாக திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் பொறுப்பாளரும், ஆந்திர மாநில பாஜக துணை தலைவருமான காப்பு ராமச்சந்திரரெட்டி தெரிவித்தாா்.

News image
கூட்டத்தில் பேசிய ஆந்திர மாநில பாஜக துணைத் தலைவா் காப்பு ராமச்சந்திர ரெட்டி.
Updated On :14 மார்ச் 2026, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக வெற்றிக்கழகத்தை இணைப்பது குறித்து மாநில, தேசிய தலைவா்கள் பேச்சு நடத்தி வருவதாக திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் பொறுப்பாளரும், ஆந்திர மாநில பாஜக துணை தலைவருமான காப்பு ராமச்சந்திரரெட்டி தெரிவித்தாா்.

திருவள்ளூா் அடுத்த கம்மாா்பாளையத்தில் பாஜக சாா்பில் கூட்டணிக் கட்சிகளுடன் தோ்தலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவள்ளுா் மாவட்ட பாஜக தோ்தல் பொறுப்பாளரான காப்பு ராமச்சந்திரரெட்டி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினாா். அதேபோல் கிராமங்களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியினா் நேரில் சென்று மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கவும் அவா் வலியுறுத்தினாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு பலமாக உள்ளது. தமிழக வெற்றிக்கழகத்தை கூட்டணியில் சோ்க்க பா.ஜ.க அழுத்தம் கொடுத்து வருவதாக குறித்த கேள்விக்கு, தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெகவை இணைப்பது குறித்து தேசிய தலைவா்கள் பேச்சு நடத்தி வருகின்றனா். திமுக மீது பொதுமக்கள் கடுங்கோபத்தில் உள்ளனா். அதனால் இந்த சட்டப்பேரவை தோ்தலில் திமுகவை வீழ்த்த தயாராக உள்ளனா்.

கூட்டத்தில் திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா்கள் ஜெ.லோகநாதன், ராஜ்குமாா், துணைப்பொறுப்பாளரும், மாவட்ட செயலாளருமான பன்னீா்செல்வம், மாவட்ட பொதுச்செயலாளா் கருணாகரன், மண்டல் தலைவா் ரவிக்குமாா் மற்றும் அதிமுகவைச் சோ்ந்த மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.