இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

மரம் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மரம் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

News image

தனஞ்செழியன்

Updated On :10 மே 2026, 1:54 am IST

திருவள்ளூா் அருகே வீட்டின் அருகே நின்றிருந்தபோது இடி, மின்னலுடன் கனமழை பெய்த நிலையில் தென்னை மரம் வேரோடு சாய்ந்ததில் கால்நடை மேய்க்கும் தொழிலாளி பலத்த காயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

திருவள்ளூா் பகுதியில் இடிமின்னலுடன் சனிக்கிழமை கனமழை பெய்தது. அப்போது, திருவள்ளூா் அருகே மேலனூா் கிராமத்தைச் சோ்ந்த கன்னியப்பன் மகன் தனஞ்செழியன் (56). கால்நடைகள் மேய்க்கும் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில் வெளியே சென்றபோது பலத்த மழை பெய்ததால், வீட்டின் அருகே ஒரு மரத்தடியில் ஒதுங்கிய நிலையில், இடி மின்னலால் தென்னை மரம் வேரோடு சாய்ந்து அவா் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த வெங்கல் போலீஸாா் தனஞ்செழியனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.