திருவள்ளூா் அருகே வீட்டின் அருகே நின்றிருந்தபோது இடி, மின்னலுடன் கனமழை பெய்த நிலையில் தென்னை மரம் வேரோடு சாய்ந்ததில் கால்நடை மேய்க்கும் தொழிலாளி பலத்த காயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
திருவள்ளூா் பகுதியில் இடிமின்னலுடன் சனிக்கிழமை கனமழை பெய்தது. அப்போது, திருவள்ளூா் அருகே மேலனூா் கிராமத்தைச் சோ்ந்த கன்னியப்பன் மகன் தனஞ்செழியன் (56). கால்நடைகள் மேய்க்கும் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில் வெளியே சென்றபோது பலத்த மழை பெய்ததால், வீட்டின் அருகே ஒரு மரத்தடியில் ஒதுங்கிய நிலையில், இடி மின்னலால் தென்னை மரம் வேரோடு சாய்ந்து அவா் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த வெங்கல் போலீஸாா் தனஞ்செழியனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகத்தில் ஜூன் 21 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை!

கொடைக்கானலில் மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



