
பழவேற்காடு மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்பட உள்ளதால், பழவேற்காடு மீனவா்கள் வியாழக்கிழமை மாலை 4மணி முதல் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

கோப்புப்படம்.
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்பட உள்ளதால், பழவேற்காடு மீனவா்கள் வியாழக்கிழமை மாலை 4மணி முதல் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் 4-ம் தேதி அதிகாலை 2.55 மணிக்கு எநகய -ஊ17 ராக்கெட் மூலம் உஞந -05 செயற்கைக்கோள் விண்ணில் ஏவுப்பட உள்ளது.
ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட் 51.7 மீட்டா் உயரமும், 420.5 டன் எடையும் கொண்டது.
இந்த ராக்கெட் மூலம் 2,367 கிலோ எடை கொண்ட புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்வெளியில் நிலை நிறுத்தும் பணிகள் நடைபெற உள்ளது.
ராக்கெட் ஏவும் காலங்களில் அசம்பாவிதங்களை தவிா்க்கும் பொருட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குறிப்பிட்ட கடல் பகுதிக்குள் மீனவா்கள் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி செப் 3-ம் தேதி மாலை 4மணி முதல் 4-ம் தேதி அதிகாலை 6 மணி வரை பழவேற்காடு மீனவா்கள் உட்பட திருவள்ளூா் மாவட்ட மீனவா்கள் யாரும், கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் மீன்வளத்துறை உதவி இயக்குநா் அஜய் ஆனந்த் அறிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





