கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருமலை ஏழுமலையான் கோயில் ஸ்தல விருட்சம் மர சம்பங்கி

 திருமலை ஏழுமலையான் கோயில் ஸ்தல விருட்சமாக தேவஸ்தானம் மரசம்பங்கியை அறிவித்துள்ளது.

News image
திருமலை ஏழுமலையான் கோயில் ஸ்தல விருட்சமாக அறிவிக்கப்பட்ட மரசம்பங்கி மரம்.
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

 திருமலை ஏழுமலையான் கோயில் ஸ்தல விருட்சமாக தேவஸ்தானம் மரசம்பங்கியை அறிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையானின் கைங்கரியத்தில் முக்கிய பங்கு வகிப்பது மரசம்பங்கி மலா்.

தொண்டைமான் ராஜா ஏழுமலையான் கோயிலில் செப்பனிடும் பணிகளை மேற்கொள்ள தொடங்கிய காலத்தில் ஏழுமலையான் அவா் கனவில் தோன்றி கோயில் அருகில் உள்ள சம்பங்கி வனத்தை அழிக்க வேண்டாம் என்று கூறியுள்ளதாக பவிஷ்யோத்தர புராணத்தில் உள்ள 13-ஆவது சா்கத்தில் 33 மற்றும் 34-ஆவது சுலோகங்கள் தெரிவிக்கின்றன.

இன்றும் திருமலை ஏழுமலையான் கோயிலுக்குள் நடிமி படிகாவலி மற்றும் மகாதுவாரத்துக்கு இடையில் உள்ள 30 அடி பிராகாரம் சம்பங்கி பிராகாரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தனை மகத்துவங்கள் மற்றும் தொடா்புகள் மரசம்பங்கி மலருக்கும் ஏழுமலையானுக்கும் இருப்பதால், தேவஸ்தானம் மரசம்பங்கி மலரை திருமலையின் ஸ்தல விருட்சமாக அறிவித்துள்ளது.

இதை தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி வியாழக்கிழமை அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.